“வந்தால் உன்னோடு! வராவிட்டால் தனியாக!! எதிர்த்தால் உன்னையும் மீறி தேசப்பணி செய்வேன்” என்று கூறி, வாழ்நாளின் பெரும் பகுதியை தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்து, சிறையில் கழித்தவர் வீர சாவர்க்கர்.
வீர சாவர்க்கரின் பிறந்த தினமான இன்று அவருக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், வீரசாவர்க்கரின் பிறந்த நாளான இன்று அவருக்கு அடி பணிகிறோம்… வீர சாவர்க்கர் தைரியம், தேசபக்தி, உறுதியான இந்தியாவை உருவாக்க சமரசமில்லாத அர்ப்பணிப்பு என அனைத்தையும் கொண்டிருந்தார். அவர் தேசத்தைக் கட்டமைப்பதில் மதிப்பு கொண்டு உழைத்த மக்கள் பலரை ஈர்த்தார் என்று புகழாரம் சூட்டி, ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோதி.
We bow to Veer Savarkar on his Jayanti.
Veer Savarkar epitomises courage, patriotism and unflinching commitment to a strong India.
He inspired many people to devote themselves towards nation building. pic.twitter.com/k1rmFHz250
— Narendra Modi (@narendramodi) May 28, 2019