டப்பு மேளங்களின் ஜோர், சாமி வந்து ஆடுவது, ‘போத்த ராஜு’ ந்ருத்தியம் எனும் நாட்டியம், இளைஞர்களின் உற்சாகம் என நகரத்தில் கோலாகலமாக போனாலு உற்சவம் களை கட்டி விட்டது.
பாக்கிய நகரத்தின் இந்த வருட போனாலு பண்டிகை, கோல்கொண்டா கோட்டையில் கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ ஜெகதாம்பாள் அம்மனுக்கு ஜூலை 4 வியாழன் அன்று தொடங்கியது. இதில், பக்தர்கள் முதலில் போனம் எனப்படும் நைவேத்தியத்தை சமர்ப்பித்து தொடங்கி வைத்தார்கள்.
அதற்கு முன் ‘ டோலீ சௌகீ’ என்ற இடத்திலிருந்து ‘பலகார பண்டி’ ஊர்வலம் தொடங்கியது. அம்மனின் விக்ரகத்திற்கு பூஜாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின் ‘கடங்கள்’ எனப்படும் அம்பாளின் முகம் எழுதிய குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோட்டை மேலுள்ள அம்மனிடம் சமர்ப்பித்தார்கள்.
தெலங்கானாவில் கோல்கொண்டா போனாலுவோடு ஆஷாடமாச போனாலு பண்டிகை தொடங்குவது வழக்கம். மாநில அளவில் ஒரு மாத காலம் இந்த உற்சவத்தை நடத்துவார்கள். ஆஷாட மாதத்திலிருந்து சிராவண மாதம் வரை இந்த ஜாத்திரை நடக்கும்.
ஒவ்வொரு வியாழனும் ஞாயிறும் அந்தந்த ஆலயங்கள் உள்ள எல்லையில் அம்மன் கோயில்களில் போனாலு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்படும். போனாலு பண்டிகைக்காக தெலங்கானா அரசு எப்போதும் போலவே மிக விமரிசையாக ஏற்பாடுகளை செய்துள்ளது. காவல் துறையினரின் கண்காணிப்பும் பலத்தப்பட்டுள்ளது. அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.