சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் என்று கூறியுள்ள அவர், சந்திரயான் 2 விண்கலம் புவிசுற்றுவட்டப் பாதையில் சென்றடைந்தது வரலாற்றில் முக்கியமான நாள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக விஞ்ஞானிகள் பலர் உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது; வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று என்று கூறிய சிவன், அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம் என்றார் இந்த வெற்றி தந்த நம்பிக்கையுடன்!