பெண்களுக்கான சிறப்பு கோச்களாக, பிங்க் வண்ணத்தில் தனித்துத் தெரியும் வகையில் ரயில் பெட்டிகளை ரயில்வே துறை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வேயில் ஆறு பாசஞ்சர் ரயில்களில் இந்தப் பெட்டிகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
மெட்ரோ ரயில்களில், ஒவ்வொரு ரயிலிலும் பெண்களுக்கு என சிறப்பு அடையாளத்துடன் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கப் படுகின்றன. இந்தப் பெட்டிகளில் பெண்களும் குழந்தைகளும் பயணிக்கலாம். பெண்கள் பெட்டிகளுடன் முதல்வகுப்புக்கென சில இருக்கைகளும் மின்சார ரயில்களில் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. இந்த வரிசையில், மற்ற ரயில்களிலும் பெண்களுக்கென ஒரு பெட்டியை ஒதுக்கப்போவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தற்போது வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வே இந்த முறையினை செயல்படுத்தியுள்ளது. அந்த ரயில்வேயின் கீழ் இயக்கும் ஆறு பாசஞ்சர் ரயில்களில் ஒரு பெட்டி பெண்களுக்கான பிரத்யேக பிங்க் கலர் பெட்டியாக மாற்றப் பட்டுள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், விரைவில் வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வேயில் உள்ளது போல பிங்க் நிறப் பெட்டிகள் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
महिलाओं की सुरक्षा के लिए अब मेट्रो की तरह ट्रेन में भी पिंक कोच लगाया जा रहा है, जिसमे महिलाएं अकेले या छोटे बच्चों के साथ यात्रा करेंगी।
इनकी शुरुआत नार्थ फ्रंटियर रेलवे द्वारा की जा चुकी है, शीघ्र ही यह सुविधा अन्य ट्रेनों में भी आरंभ की जाएगी।https://t.co/vxdqe0U2XT
— Piyush Goyal (@PiyushGoyal) July 31, 2019
பிங்க் நிற பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுவது பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.