இவருக்கு பார்கர் என்ற கணவரும் ஸ்ருதி என்ற 17 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பிரக்ன்யாவின் கணவர் பார்கர் வழக்கம்போல் ஜிம்முக்கு சென்றுள்ளார்.காலை 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார் பார்கர்.
அப்போது பெட்ரூமில் உள்ள ஃபேனில் பிரக்ன்யா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மகள் ஸ்ருதி படுக்கையில் பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளார்.
இதற்கு யாரும் பொறுப்பல்ல என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் பிரக்ன்யா. திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தில் மன அழுத்தத்தில் இருந்த பிரக்ன்யா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.