நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: தமிழக முதல்வர் உத்தரவு!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, அடவிநயினார் கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, நெல்லை மாவட்டத்தில் கடனாநதி அடவிநயினார் கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு 8225.46 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைய நாளை முதல் அடுத்த மாதம் 25 ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார்.