இலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல்
இன்று (18) இலங்கை சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
இந் நிலையில் இவருடன் எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாக அவர்களுக்கு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் ஒன்று இலங்கையில் கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தேயிலை தோட்டத்தில் நடந்துள்ளது.
இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்..
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெருபான்மை மக்களாகிய சிங்கள மக்களின் வாக்குகளிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு கோத்தாபய ராஜபக்ச அவர்கள் வெற்றியீட்டினார்.
சிறுபான்மை மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாக அவர்களுக்கு வாக்களித்தனர். காரணம் கோத்தாபய ராஜபக்ச அவர்கள் மீது சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள வெறுப்பு.
இந் நிலையில் தாங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்பதினால் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடாத்தி உள்ளனர். இதனால் இலங்கையில் இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள அச்சத்தில் உள்ளனர்.