ஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசு ஒய்எஸ் விஜயம்மா சாரிடபுள் ட்ரஸ்டிற்கு தடை விதித்துள்ளது. ஒய்எஸ் ஜெகன் மீது மத்திய அரசு கத்தியை தீட்டுகிறது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நிபந்தனைகளை கடைபிடிக்காத என்ஜிஓக்களுக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
வெளிநாட்டு நிதிகளின் சட்டங்களை மீறியதால் தெலங்காணாவைச் சேர்ந்த 90, ஆந்திராவைச் சேர்ந்த 168 என்ஜிஓக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது .
அதில் ஒய்எஸ் ஜகனின் தாயார் பெயரில் உள்ள ஒய்எஸ் விஜயம்மா சாரிடபுள் ட்ரஸ்டும் ஒன்று. அதனால் சோசியல் மீடியாவில் இந்த செய்தி வைரலாக மாறியது.
ஃபாரின் கன்ட்ரிபியூஷன் ரெகுலேஷன்ஸ் சட்டம் 2010 (எஃப்ஸிஆர்ஏ) வின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத் செகந்திராபாத்களில் நடக்கும் சர்ச்சுகள் மற்றும் கல்வி நிலையங்களை கேன்சல் செய்து உள்ளது.
இந்த லிஸ்டில் சேவாபாரதி, ஹைதராபாத் ஆர்கேடியோசிஸ் எடுக்கேஷனல் சொசைட்டி, சத்திய ஹரிச்சந்திரா பவுண்டேஷன் ஆகியவை உள்ளன.
ஆந்திராவில் ரூரல் எடுகேஷன்ஸ் & டெவலப்மென்ட் சொசைடி, ராயபாடி சாரிடபுள் சொசைடி, ஒய்எஸ் விஜயம்மா சாரிடபுள் ட்ரஸ்ட், பிலடெல்பியா ஜியான் மினிஸ்டரீஸ், அருணா மகிளா மண்டலி போன்ற என்ஜிஓக்களின் பதிவுகளை ரத்து செய்தது.
வெளிநாட்டு நிதிகளோடு தொடர்புடைய வருடக் வரவு செலவுக் கணக்கு விவரங்களை அளிக்காததே எஃப்சிஆர்ஏ பதிவு ரத்துக்கு முக்கிய காரணம்.
எஃப்சிஆர்ஏயின் கீழ் வெளிநாட்டு நிதிகளின் விவரங்களை என்ஜிஓக்கள் வருடாந்திர வரவு செலவுக் கணக்கு தாக்கலில் சமர்பிப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது.