― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ

104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாகவும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

பூமியை கண்காணிப்பதற்காக, 714 கிலோ எடை கொண்ட இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் கார்டோசாட்-2 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ்-1பி என 2 நானோ வகை 3 செயற்கைகோள்களும், அமெரிக்கா, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாண்ட்  மற்றும் அரபு உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.

104 செயற்கைக்கோள்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ரஷ்யா ஓரே ராக்கெட் மூலம் 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

தற்போது பிஎஸ்எல்வி -சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை அனுப்பி உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

இந்த செயற்கைகோள்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற் கொள்ளை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version