சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் நிகழ்த்திய ஜனநாயக படுகொலையை கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.