― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை–வல்லம் ரோட்டில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு, நகர தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பார்வையாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் வாசன், தென்காசி ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் முத்து, செங்கோட்டை ஒன்றிய தலைவர் சரவணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பேச்சுமுத்து, நகர இந்து முன்னணி செயலாளர் மாசாணம் உள்ளிட்ட  ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோ‌ஷங்கள் போட்டனர். 
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர்.
இதே போல நெல்லை மாவட்டத்தில் நெல்லை டவுன், பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், களக்காடு, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் 
உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். 
இதில் 184 பெண்கள் உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version