பிப்ரவரி 19 1971 ஹிந்து தலையங்கம் இது..
ஹிந்து ஆண்,பெண் கடவுள்களின் படங்கள் அவமானப்படுத்தப்பட்டது. அதோடு அதை எதிர்த்த மக்களுக்கு எதிர் வினையாக கத்தி, கட்டை இன்னும் பல ஆயுதங்களுடன் அந்த ஊர்வலத்தை நடத்தினார்கள் என்றும் எழுதியுள்ளார்கள்..
சம்பவம் நடந்து #ஏழுநாள் கழித்து நான் செய்தித்தாள் பார்த்து தெரிந்து கொண்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
ஆனால் அதை வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையை பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல் ஆபாசம் மற்றும் அசிங்கமான துண்டு பிரசுரத்தை விநியோகித்ததாக section 292 A பிரிவில் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
அதே சமயம் அதை வரைந்து ஊர்வலம் நடத்திய பெரியார் மீதோ தி.க மீதோ எந்த வழக்கையும் பதியாதது கருணாநிதியின் உள்நோக்கம் என்ன என்பதை காட்டியிருக்கிறது மேலும் பாரபட்சமான நடவடிக்கை என்பதும் அரசியல் ரீதியில் நடந்து கொண்டதும் பெரிதாக தெரிந்திருக்கிறது எனவே நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.
- சுந்தர்