மேடாரம் வன தேவதைகளை தரிசித்தார் தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தெலங்காணா கும்பமேளாவான மேடாரம் திருவிழாவுக்கு பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து தரிசித்துச் செல்கின்றனர். அதனால் கத்தெலு எனப்படும் மேடை அருகில் மிகப் பெரிய கூட்டம் மிகுந்து வருகிறது. தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, ஹிமாச்சல் பிரதேஷ் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வன தேவதைகளை இன்று தரிசித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.
தெலுங்கு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி சத் ஸ்கர், ஒடிஷா, மத்திய பிரதேஷ், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்கு வந்த வண்ணம் உள்ளனர். சம்மக்கா, சாரலம்மாவை தரிசித்தது ஆனந்தமாக இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார் .
மாநில மக்கள் அனைவருக்கும் வன தேவதைகளின் அருள் ஆசீர்வாதம் இருக்கவேண்டும் என்று கோருவதாகக் கூறினார். சம்மக்கா சாரலம்மா திருவிழா இயற்கையோடு இணைந்தது என்று ஹிமாச்சல் பிரதேஷ் கவர்னர் தத்தாத்ரேயா குறிப்பிட்டார். தெலங்காணா மாநிலம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக அவர் கூறினார்.
வியாழனன்று இரவு சம்மக்கா தேவியை மேடைக்கு எடுத்து வந்த பின்னர் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர். எப்படிப்பட்ட சூழல்களையும் சமாளிக்கும் வண்ணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.