― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅமைதியாய் இரு... 'பெரும்பான்மையே'!

அமைதியாய் இரு… ‘பெரும்பான்மையே’!

- Advertisement -

“தனக்குப் பிடித்ததைத் தான் அரசாங்கம் செய்ய வேண்டும் என்றால் சட்டம் எதற்கு, சட்டசபை எதற்கு?” – இது போன்ற கேள்விகளைக் கேட்கும் காலம் கடந்து விட்டது தமிழ் நாட்டில்.

தமிழ்நாடு ஒரு விசித்திர பூமியாக மாறி வருகிறது. CAA சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதகமும் இல்லை என்று தெரிந்தும் ஸ்டாலின், தன் அரசியல் நிர்பந்தத்துக்காக” கையெழுத்து கேட்டதும் “எதற்கு கையெழுத்து? கொஞ்சம் விளக்குங்களேன்” என்று கேள்வி கேட்காமல் “பெரும்பான்மை” அமைதியாய் கையெழுத்து போடுகிறது.

சுந்தர வில்லிகள் தைரியமாக (விதிமுறைகளை மீறி) போராட்டம் செய்யும் முஸ்லிமுக்கு ஆதரவாக “நான் சொன்னதை செய்யாவிட்டால் நாளை சட்டமன்றத்தை/ஆளுநர் மாளிகையை முற்றுகை இடுவோம்” என்று ரவுடித்தனம் செய்கின்றன.

“பெரும்பான்மை” அமைதியாய் இருக்கிறது.

ஒரு கிறிஸ்தவ மத வியாபாரி “தமிழ்நாடு முழுவதையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி விடலாம். நாம் 60 லட்சம் அவர்கள் 5 கோடி. மாற்றி விடலாம்” என்கிறான்.

“பெரும்பான்மை” அமைதியாய் இருக்கிறது.

இன்னொரு கைக்கூலி தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் “I made sure Jesuit ideas are inserted in TN text books” என்கிறான். பாரதியின் தலைப்பாகை காவியாய் இருந்ததென்று, வானுக்கும் பூமிக்கும் குதித்த அரசியவாதிகள் இப்பொழுது வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.

“பெரும்பான்மை” அமைதியாய், மயக்க நிலையில், இருக்கிறது.

எத்தனையோ கோவில்கள் minimum maintenance செய்யக் கூட வழியில்லாமல் களையிழந்து நிற்கின்றன. பாரி வள்ளல் கதை கேட்டு வளர்ந்த கோபுரங்கள், இன்று ஒரு செங்கல்லுக்கு வக்கில்லாமல், தன்னைக்காக்க யார் வருவாரோ என்று கழுத்து நீட்டி பாரியையோ ராஜராஜனையோ தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கம்பீரம் மட்டும் குறையவில்லை. தமிழக அரசோ தமிழ் கலாச்சாரதின் அடையாளமாக விளங்கும் கோவில்களை, “சீ போ” என்று, உதாசீனப் படுத்திவிட்டு ஒரு மசூதிக்கு/சர்ச்சுக்கு மட்டும் வள்ளலாய் மாறி 5 கோடி கொடுக்கிறேன் என்கிறது.

“பெரும்பான்மை” அமைதியாய் இருக்கிறது.

CAAக்கு ஆதரவாய் செயல்பட்டவனை பாலக்கரையிலும், “ஏழைகளை மதம் மாற்ற வேண்டாம், எல்லோரும் அவரவர் அடையாளங்களுடன் ஒன்றாய் இருப்போம் ” என்றவனை திருபுவனத்திலும் துடிக்க துடிக்க கொன்று போடுகிறது அந்தக் கூட்டம்.

இதையெல்லாம் ஆதரிக்கும் கட்சிக்கு 38 சீட் கொடுத்துவிட்டு “பெரும்பான்மை” அமைதியாய் இருக்கிறது.

1971ல், ஒரு கலாச்சாரமற்ற காட்டுமிராண்டி “பிள்ளையார் சிலையை உடைக்கும்” போராட்டம் செய்கிறான். இது தெரிந்தும் “காப்பாத்துப்பா பிள்ளையாரப்பா” என்று காலையில் கும்பிடும் கூட்டம் அந்த காட்டுமிராண்டி சார்ந்த கட்சிக்கு ஒட்டு போட்டு, எப்பொழுதும் இல்லாத அளவு, மாபெரும் வெற்றி பெறச் செய்கிறது.

தான் கும்பிடும் கடவுளுக்கே அவமானம் வரும்போது தேமே என்று இருந்த கூட்டம் இன்று ராமலிங்கத்துக்கும் விஜயரகுவிற்கும் எதாவது செய்யும் என்று நினைப்பது மாபெரும் தவறுதான்.

வண்ணாரப்பேட்டை, ஆம்பூர் கலவரம், 5 கோடி எல்லாம் ஒரு அரசியல் வியாபாரம். இதில் நஷ்டம் பெரும்பான்மைக்கு மட்டுமே. மற்ற எல்லாரும் பயனாளிகள்.

இது தெரிந்தும் “பெரும்பான்மை” அமைதியாய் இருக்கிறது.

அமைதியாய் இரு “பெரும்பான்மையே”. கத்தி உன் கழுத்துக்கு வர இன்னும் கொஞ்சம் நாளாகும். அதுவரை அமைதியாய், சந்தோசமாய், இரு பெரும்பான்மையே.

-ச. சண்முகநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version