மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி இது!
மதுரை: மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பு:
மின் கட்டணம் செலுத்த அறிவிக்கப்பட்ட கடைசி தேதியிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து ஜூலை 30-க்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். நோய் கட்டுப் பாட்டு பகுதியில், கட்டுப்பாடு நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.