இன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமான கோகுலாஷ்டமி நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மதுரையிலும் பல்வேறு ஆலயங்களில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், பெரிய கோவில்களில் வழிபாடுகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சிறிய கோயில்களில் மிகக் குறைவான பக்தர்கள் தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வழிபட்டு வருகின்றனர்.
கோகுலாஷ்டமியையொட்டி, மதுரை மஹால் பந்தடி ஐந்தாவது தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று கிருஷ்ணருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று கிருஷ்ணர் அருள் பெற்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை