இன்று நாடு முழுதும் 74வது சுதந்திரதின விழா கொண்டாடப் பட்டு வருகிறது. இதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் சுதந்திர தின கொடியேற்றி வைத்து, விருதுகள் சான்றிதழ்களைக் கொடுத்து தகுதியுள்ளவர்களைப் பாராட்டியுள்ளனர்
அவ்வகையில் மதுரையில் கோவிட் 19 தொற்றை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் செய்த அளப்பரிய மக்கள் சேவைக்கு அங்கீகாரமாய், மதுரை மாவட்ட ஆட்சியர் Dr. வினய் சேவாபாரதி – கேசவ சேவா கேந்திரம் ( மதுரை ) க்கு விருது வழங்கி கெளரவித்தார்.
இதனை உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் துறை பொறுப்பாளராக இருந்தவரும், மதுரை ஜில்லா ப்ரசார் ப்ரமுக்(செய்தி தொடர்பாளர்)குமான ரகுமான் பெற்றுக் கொண்டார்.