பிரபல பின்னணி பாடகி சுனிதா உபத்ரஷ்தா. 1995 முதல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் ‘பத்ரி’, ‘காதல் ரோஜாவே’ உள்ளிட்ட சில படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக சுனிதா தெரிவித்துள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று (20.08.20) வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சுனிதா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
என்னுடைய உடல்நிலை குறித்து கேட்டு எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகளும், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்களிடமிருந்து குறுந்தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவரது அக்கறைக்கும் நன்றி