தற்பொழுது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு சிலர் கொரோனா ஞாபகார்த்தமாக கொரோனா குமார் கொரோனா தேவி மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட பெயர்களை வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம் ஆனால் 34 வருடத்திற்கு முன்பே இந்த பெயரை கொண்டுள்ள பெண்மணி இருக்கிறார்.
கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் பெயர் கொரோனா.
இவருக்கு சரியாக 34 வருடங்களுக்கு முன் ஒருய் பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அர்த்தன் கிரவுன்(Crown) என்று கூறியுள்ளார்.
தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். சிலர் கிண்டல்செய்கிறார்கள். மேலும் ரத்த தானம் செய்ய பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் திருமதி. எஸ்.கொரோனா. இந்தப் பெயர் தனதுக்கு வேதனையைத் தருவதாகவும் வருத்தப்பட்டு வருகிறார்.