திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவர் புதுக்கோட்டையில் வங்கி கேஷியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் எட்வினுக்கும், தஞ்சையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளிலிருந்து எட்வின் மனைவியுடன் சரியாக நேரம் செலவழிக்காமல், மூன்றாம் நபரை போல பழகி வந்துள்ளார்.
இதனால் எட்வின் மீது சந்தேகம் எழவே, அவருடைய பீரோவை ஆய்வு செய்தபோது, அதில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் என இருந்துள்ளது. அந்த லேப்டாப்பில், எட்வின் பல பெண்களுடன் ஆபாசமாக இருந்த வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்துள்ளன.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கணவன் எட்வின் மீது அப்போதே தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தபோது, சில வாடிக்கையாளர் பெண்களிடம் தந்திர பேச்சு மூலம் எட்வின் அவர்களை கவர்ந்துள்ளார்.
அந்த பெண்களிடம் தொடர்பை வளர்த்துக்கொண்டு தனிமையில் இருந்துள்ளார். தான் ஒருவர் மட்டும்தான் எட்வினுக்கு பழக்கம் என நினந்துகொள்ளும் பெண்கள் அவரிடம் தன்னையே முழுமையாய் ஒப்படைக்க, அதை வீடியோவாக எட்வினும் எடுத்துவைத்துளார்.
தன்னுடைய உல்லாச வாழ்க்கையில் இரண்டாம் முறையாக ஒத்துழைக்க மறுக்கும் பெண்களுக்கு, அவர்களுடைய தனிப்பட்ட வீடியோக்களை அனுப்பி மிரட்டுவது எட்வின் ஜெயக்குமாரின் வழக்கம்.
இந்த விசாரணை நடந்து வந்த வேளையில் மதுரை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக்கொண்ட எட்வின் ஜெயக்குமார் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். அவருடைய செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார் திருச்சியில் இருக்கும் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
ஆனால், அவர் பழகிய பெண்களுடன் எடுத்திருந்த 400 ஆபாச படங்களை மட்டும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதற்காக, எட்வினை போலீஸ் காவலில் எடுத்து அவைகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக கூறுகின்றனர்.