பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஹிந்து எழுச்சி முன்னணியினர் தேனியில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வைத்து, இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன்.இரவி வழிகாட்டுதலில் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக பாரதப் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து நம் பாரத தேசத்தை வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பொறுப்பாளர்கள் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.