மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை, தன் பேரனுக்கு எழுதி வைத்துவிட்டாராம். இதனால் கோபமடைந்த பாண்டியன் மகன் சந்திரசேகரன், பாண்டியன் மற்றும் அவரது மனைவியை சொத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறாராம்.
இதனால் மனமுடைந்த பாண்டியன் செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாராம். இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார், தடுத்து நிறுத்தி, அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை