ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப் படுகிறது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
துலாம் மாதத்தின் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நாளை மாலையில் தொடங்கி நடைபெற உள்ளன. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது. சபரிமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.