உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி உங்களை ஏமாற்றி பணத்தைப் பறிக்கும் கும்பல் உலா வருகிறது என்று கூறி காவல்துறை எச்சரிக்கை!!! ஒன்று வெளியாகியுள்ளது.
அதில்… உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 நபர்களுக்கு மேல் பார்ப்பதன் மூலம் தினமும் ரூபாய் 500 வரை சம்பாதிக்கலாம் என்று உங்களின் தொலைபேசி எண் மூலம் அந்த பக்கத்தில் கணக்கு தொடங்க வைத்து,மேலும் நீங்கள் இதன் மூலம் பெறும் பணத்தை கூகுள் பே, போன் பே மூலமாகத்தான் பெற முடியும் என்று கூறி உங்களின் வங்கி தகவல்களை பெற்று அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் புதியவகை மோசடி கும்பல் தற்போது வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது.
எனவே மக்கள் இதுபோன்ற மோசடி வேலை செய்யும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்! .. என்று குறிப்பிட்டுள்ளது அந்த எச்சரிக்கை செய்தி!