கடந்த ஒரு வாரத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது.
மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது. சோதனைக்கு பின் கைப்பற்றப்பட்டது.
இவை, கடந்த 28.02.21 முதல் 06.03.21 வரை ஒரு வாரத்தில் 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2771.00 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது.