கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நாடு ஆக்ஸிஜன் நெருக்கடியை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது.
ஆக்ஸிஜன் அளவைப் பராமரிக்க உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மிக முக்கியமானது. இரத்தம், ஆக்ஸிஜன் இவை இரண்டும் நம் உடலுக்கு மிக முக்கியமானது. இவை, மறுக்கமுடியாதபடி மனித உடலில் மிகவும் அவசியமான திரவமாகும். உயிரணுக்களிலிருந்து வளர்சிதை மாற்றக் கழிவுகளை பிரிக்கும் வரை உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் புழக்கத்தில் இருந்து, இரத்தம் நம் இருப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான இரத்தம் தேவைப்படுவதற்கான காரணம், முக்கிய செயல்பாடுகளை உடல் தொடர்ந்து செய்வதற்கு ஆகும்.
மேலும், வலுவான வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுவதும் ஆகும். சுவாரஸ்யமாக, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று, உணவு முறை. உங்கள் உணவை மாற்றியமைப்பதன் மூலமும், இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுகளை சேர்க்க வேண்டும். உங்கள் அன்றாட உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி காணலாம்.
பீட்ரூட் போன்ற ரூட் காய்கறிகளில் தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளன. ஆனால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பீட்ரூட் சிறந்தவை இது, இரும்பு, ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் கலவையாகும். அவை இரத்தத்தை சுத்திகரிக்கவும் இயற்கையாகவே உடலில் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க பீட்ரூட் சாறு சரியானது.
மாதுளையில் பாலிபீனால் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நன்மைகள் நிரம்பியுள்ளன. அவை இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும், இரத்தக் கட்டிகளைத் தடுப்பதற்கும் உதவுகின்றன. அவை இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக இருப்பதை உறுதி செய்கின்றன. மாதுளை வைட்டமின் சி-யின் ஒரு நல்ல மூலமாகும். பொட்டாசியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
இனிப்பு மற்றும் புளிப்பு பெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஏற்றது மற்றும் அவற்றின் துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த கலவை இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனின் அதிகரிப்பை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பழங்கால மசாலா அற்புதமான குணப்படுத்தும் விளைவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் உங்கள் தேநீர் கலவைகள், சூப்கள் மற்றும் சாலட்களில் ஒரு சிறிய அளவைச் சேர்ப்பது இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதோடு இரத்தத்தின் நீர்த்தலுக்கும் உதவும். மேலும், இந்த சூடான மசாலா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
பூண்டு
நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், செரிமானத்தை மேம்படுத்துதல் முதல் இரத்த சுழற்சி அதிகரிப்பது வரை பூண்டு சரியான ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. ஆய்வுகள் படி, தினமும் பூண்டு சாப்பிடுவது மோசமான கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆக்ஸிஜன் அதிகமிருக்கும் உணவுகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது எலுமிச்சை. இதில் அதிகப்படியான எலெக்டோலிடிக் துகள்கள் இருக்கின்றன. எலுமிச்சை சாறு தொடர்ந்து எடுத்து வந்தால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். அதோடு உடலில் சேர்ந்திருக்கும் பாக்டீரியாக்களையும் இது அழிக்கும்.
கேரட் தவிர அவகேடோ, பெர்ரீ,வாழைப்பழம், பேரீட்சை,பூண்டு ஆகியவை ஆக்ஸிஜனை அதிகரிக்கும் உணவாகும். இவற்றில் எல்லாவற்றிலும் ஆண்ட்டி ஆக்ஸிடன் அதிகமாக இருக்கின்றன. இவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவிடுகிறது.
திராட்சை,பேரிக்காய்,அன்னாசிப்பழம், கிஸ்மிஸ் ஆகியவையும் ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும். இவற்றில் விட்டமின் சி,ஏ மற்றும் பி ஆகியவை அதிகமாக இருக்கின்றன இது ரத்த அழுத்தத்தை சீர் படுத்தும் அதோடு இதயம் தொடர்பான பிரச்ச்சனைகள் வராமல் தவிர்க்க உதவிடும்.
பழச்சாறு அல்லது காய்கறி ஜூஸில் ஆக்ஸிஜனை அதிகரிக்ககூடிய தன்மை நிறையவே இருக்கிறது. இவற்றில் ஃபேலவனாய்டு நிறைய இருக்கும். இவை இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் தான் இருக்கும் மற்றபடி பாக்கெட் உணவுகளில் இருக்காது.
இது நம் உடலில் அல்கலைனை அதிகரிக்கச் செய்வதால் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.
இது நம் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவிடும். இவற்றில் அஸ்பரகைன் அதிகமாக இருக்கிறது இவை எடுத்துக் கொள்வதால் உங்கள் நரம்புகளுக்கு வலு கிடைத்திடும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
மாம்பழம்,தர்பூசணிப்பழம் ஆகியவற்றில் அதிகப்படியான விட்டமின் இருக்கிறது. அதோடு இவை செரிமானத்திற்கும் பெரிதும் உதவிடும். பப்பாளிப்பழம் பெருங்குடலை சுத்தப்படுத்த உதவிடும்.
கேப்சிகம்மில் அதிகப்படியான என்சைம் இருக்கின்றன. அதைத் தவிர விட்டமின் ஏ இருக்கிறது. இது உங்களின் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
கடல் உணவுகளான மீன், நண்டு,இறால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவற்றில் ப்ரோட்டீன்,சில பி விட்டமின்ஸ் மற்றும் இரும்புச் சத்து கிடைத்திடும். அதோடு இவற்றில் அமினோ அமிலம் இருக்கின்றன.
பட்டாணி,பீன்ஸ் வகைகளை நிறைய உட்கொள்வதால் நம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்திடும். ஒரே வகையை உட்கொள்ளாது பீன்ஸ் வகைகளிலேயே பல கிடைக்கின்றன அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இவற்றைத் தவிர தானிய வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எடுத்துக் கொள்ளும் போது அளவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இத பிற உபாதைகளை ஏற்படுத்திடும்.
பொதுவாக தானியங்களில் ப்ரோட்டின்,பி விட்டமின் ஆகியவை இருக்கும். இவை உங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கக்கூடியது. முழு கோதுமை,ஓட்ஸ்,அரிசி ஆகியவற்றை உண்பதால் நிறைய ஆக்ஸிஜன் கிடைத்திடும்.
தர்பூசணியில் ஆல்கலைன் நிறைய இருக்கிறது. இவற்றில் அதிகப்படியான தண்ணீரும் ஃபைபரும் இருக்கின்றன. அதோடு இவற்றைத் தவிர இதில் பீட்டா கரோட்டீன், லைகோபின் மற்றும் விட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி எனர்ஜி கிடைத்திடும், இது சீசன் பழம் என்பதால் கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை தவர விட்டுவிடாதீர்கள்