சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ திருவிழாவின் 9-வது நாள் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி ஆளும் பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் தெப்பக்குளத்தின் எதிரில் உள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபத்தில் மண்டப திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு சக்கரத்தாழ்வாருக்கு கைரவிணி புஷ்கரணி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
![திருவல்லிகேணி கோயில் தீர்த்தவாரி... 1 images 11](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/images-11.jpeg)