ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது
அதன்படி மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் விருதுநகர் – நாகர்கோவில் வரை பகுதியாக ரத்து
மார்ச் 30 மற்றும் 31 ம் தேதி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மதுரை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து
அதே போல் மறுமார்க்கத்தில் மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 ம் தேதி நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோயில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து
மார்ச் 31 ஏப்ரல் 1 ம் தேதி தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து . அதே நேரத்தில் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.
மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து
மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் மதுரை – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து
மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து
ஏப்ரல் 1ல் குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து
மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து
மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் மதுரை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து
மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து
மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்படும் மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விருதுநகர் – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து
மறுமார்க்கத்தில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து
மார்ச் 26, 29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரிலிருந்து புறப்படும் தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் விருதுநகர் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து
மறுமார்க்கத்தில் மார்ச் 28, 31 ஏப்ரல் 1 தேதிகளில் திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து
மார்ச் 27 ல் புதுச்சேரி – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் மார்ச் 28 ல் கன்னியாகுமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து
மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் விருதுநகர், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது