ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் ஏர்வாடி. இந்த ஊரில் பாதுஷா நாயகம் தர்ஹா அமைந்துள்ளது. உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து, நாள்தோறும் தர்ஹாவில் வழிபாடு செய்வதன் மூலம் குணமடைந்து வருவதாக நம்பிக்கை உள்ளது.
இதனடிப்படையில், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த நோயளிகள் இங்கு தங்கியுள்ளனர். இது தவிர நாள் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், வழிபாடு செய்யவும் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா, இன்று தொடங்க உள்ளது.