கரூர் நகர குற்ற எண்: 702/2018 வழக்கு பிரிவு 294B 203 504/2 506/1 Sec 67 IT Act பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால் நீதிபதி ரகோத்தாமன் வீரைவு நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் நீதிபதி முன்பு ஆஜராகி ஆனந்தகுமார் உடல்நல குறைவு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று நீதிபதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இதனிடையே கரூர் நிருபர் கைதான விவகாரத்தில் பல தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வெளியிட்டால் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவின் கீழ் வழக்கா? தினமலர்.காம் செய்தியாளர் கைதுக்கு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டனம்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்- குறள்
தன்னை இடித்துக்கூறித் திருத்தவல்ல பெரியவர்களின் துணை இல்லாத, பாதுகாவலற்ற மன்னன், பகையாய்த் தன்னைக் கெடுப்பார் யாரும் இல்லாவிட்டாலும் தானே கெட்டழிவான். என்ற குறல் மொழியை அலட்சியம் செய்யும் காட்சிகள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகைத்துறை அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்புள்ள துறை. மக்களின் தேவைகள், அரசின் குறைகள், நடக்கும் நிகழ்வுகளை கொண்டுச் சேர்க்கும் கடமை பத்திரிகைகளுக்கு உண்டு. அதை காது கொடுத்து கேட்பதும், குறைகளை களைவதும், மக்கள் பணி செய்வதும் அரசின் கடமை.
ஆனால் ஊடகங்களை முடக்கும் செயலில் ஈடுபடுவதும், மிரட்டுவதும், காவல்துறை மூலம் பொய் வழக்குகள் போடுவதும் தற்போதை அரசு செய்வது ஏற்புடையது அல்ல. பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் மிரட்டுவதும், சிறையில் அடைப்பதன் மூலமும் எதையும் மூடி மறைத்துவிட முடியாது.
சமீப காலமாக அரசை, காவல் துறையை நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள் செல்வாக்குடன் உலா வருவதும் மக்கள் பிரச்சினைகளை எழுதும் பத்திரிகையாளர்களை கைது செய்வது, மிரட்டுவது அதிகரிக்கும் போக்கு இந்த அரசு ஜனநாயக பாதையில்தான் செல்கிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
அமைச்சரின் செய்தியை போட்டதற்காகவும், அந்த செய்தியின் லிங்கை தனது முகநூலில் பதிவிட்டதற்காகவும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பத்திரிகையாளர்மீது புனையப்படுவது தமிழகத்தில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது. தினமலர் டாட்காம் மூத்த செய்தியாளர் அனந்தக்குமார் கைதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கி அவரை விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஜனநாயக எண்ணம் கொண்டோர் இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்…. என்று மிதார் மைதீன் (பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம்.) தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா..?, ஹிட்லர், முசோலினி ஆட்சியா…?” -கரூர் மாவட்ட செய்தியாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து சமூகவலைதளங்களில் செய்தி வெளியிட்டதாக வந்த புகாரின் பேரில் *இமயம் தொலைக்காட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர்* திரு. *ஆனந்தகுமார்* அவர்கள் கைது செய்யப்பட்டு அவர் மீது (கரூர் நகர குற்ற எண்: 702/2018) *294B 203 504/2 506/1 Sec 67 IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு* செய்யப் பட்டுள்ளதை *தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.*
மேலும் அண்மை காலமாக *நீதித்துறை குறித்தும், காவல்துறை குறித்தும் தவறான விமர்சனங்களை முன் வைப்பவர்கள் மீதும், பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வோர் மீதும் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் என்கிற காரணத் தினால் கைது செய்யப்படாமல் காவல் துறையினரின் பாதுகாப்போடு சுதந்திரமாக உலா வரும் நிலையில்* மத்திய, மாநில அரசுகளையோ அல்லது *ஆட்சி புரிகின்ற கட்சிகள் குறித்தோ* அல்லது *ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் குறித்தோ விமர்சனம் செய்தால் மட்டும் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதும், வழக்குப்பதிவு செய்த சில மணி நேரங் களிலேயே அவர்கள் கைது செய்யப்படுவதையும் காண்கையில் ஹிட்லர், முசோலினி போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சி நமது சுதந்திர இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் நம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அரசுக்கு எதிராக, ஆட்சியாளர் களுக்கு எதிராக குரல் கொடுப் போரையும், போராடுபவர்களையும் *காவல் துறை மூலம் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டு விட்டால் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்து உண்மையை உலகறிய செய்யாமல் செய்து விடலாம்* என எண்ணினால் ஏமாறப் போவது ஆட்சியாளர் களாகிய நீங்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
எனவே *இமயம் தொலைக் காட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர் ஆனந்தகுமார் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதோடு அவரை எந்தவொரு நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக கைவிடுமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்…என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ. பொன்னுசாமி தெரிவித் துள்ளார்.