― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் வசூல் வேட்டை நடத்தும் கொள்ளையர்கள்

தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் வசூல் வேட்டை நடத்தும் கொள்ளையர்கள்

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
 
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.
 
இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வசூல் வேட்டை நடத்தி வயிறு வளர்த்து வரும் பல பணவெறி பிடித்த வசூல் வேட்டை கொள்ளையர்கள் தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் டுபாகூர் ரசீதை அச்சடித்து அதை கையில் எடுத்துக்கொண்டு வசூல் வேட்டை நடத்தி வருவதாக பரவலாக கூறப்படுகின்றது.
 
வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் ஓடி ஒளிந்து தலைமறைவான கொள்ளையர்கள் தற்போது நாங்கள் உதவி செய்ய போகிறோம் என சொல்லுவதாக தெரிகிறது. மேலும் ஒரு சிலர் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்ப்பட்ட நட்பை தவறுதலாக பயன்படுத்தி வங்கி கணக்கை அறிவித்து பணம் அனுப்ப கோரிக்கை விடுத்து வசூல் வேட்டை நடத்த கூடும் .
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழக அரசு வழியாக நிதி உதவி செய்வதற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
மனித நேயத்துடன் உதவி செய்ய நினைப்போர் தமிழக அரசு அறிவித்துள்ள கீழ்கண்ட தகவல் படி அனுப்பி உதவலாம்.
 
காசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப :-
 
‘The joint secretary & treasurer, Chief Minister’s Public relief fund, Finance department, Government of Tamilnadu, secretariat, Chennai 600009, Tamilnadu, India. எனும் முகவரிக்கு அனுப்பவும்.
 
உங்களுடைய வங்கி கணக்கை பயன்படுத்தி இணையதள (ECS) மூலமாக, தமிழக அரசு பணம் வங்கி கணக்கில் பணம் செலுத்த :-
 
Government of Tamilnadu,
S.B.A/c number: 117201000000070
Indian Overseas Bank, IFS code: IOBA0001172,
Secretariat Branch, Chennai – 600 009
CMPRF PAN: AAAGC0038F.
எனும் கணக்கில் செலுத்தலாம் .
 
நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வருமான வரியில் இருந்து 80-ஜி பிரிவின்கீழ் வரி விலக்கும் கிடைக்கலாம் .
 
தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் டுபாகூர் ரசீதை அச்சடித்து அதை கையில் எடுத்துக்கொண்டு உங்களை கட்டாயமாக பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று வசூல் வேட்டை கொள்ளையர்கள் மிரட்டினால் எவ்விதமான
தயக்கமும் இல்லாமல் காவல் துறையின் அவசர தொலைபேசி எண் 100யை தொடர்பு கொண்டோ அல்லது உங்களுக்கு
அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version