தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் இது, 2017ஐ விட 24% குறைவு என்றும் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் இருந்தன குறிப்பாக, சரக்கு வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத்து மற்றும் தரமற்ற சாலைகள் ஆகியவற்றினால் பெரும்பாலான விபத்துக்கள் நேரிடுகிறது.
அதேபோல் மதுபோதையில் வாகனம் ஓட்டும் காரணத்தினாலும் அதிக விபத்துகள் அரங்கேறி வருகிறது கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர்
எனவே சாலை விபத்துக்களை தடுக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது
அதன் அடிப்படையில் அந்தந்த மாநில போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதேபோல் விபத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் கடுமையாக உயர்த்தப்பட்டது
இது போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் தமிழகத்தில் கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்துள்ளது இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 65 ஆயிரத்து 562 சாலை விபத்துகள் நடந்துள்ளன
இதில் அதிகபட்சம் சென்னை நகரத்தில் 7259 விபத்துகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1176 விபத்துக்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 1237 திருநெல்வேலி மாவட்டத்தில் 2260 விபத்துக்களும் திருவாரூர் மாவட்டத்தில் 908 விபத்துகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 995 விபத்துகளும், கரூர் மாவட்டத்தில் 1097 விபத்துகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1216 விபத்துகளும் நடைபெற்றுள்ளன
அதே சமயம், கடந்த 2018ம் ஆண்டில் ஜனவரி-டிசம்பர் வரை சாலை விபத்துகள் குறைந்துள்ளது
அதன்படி அந்த ஆண்டில் 63 ஆயிரத்து 920 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.50 சதவீதம் குறைவாகும் 2017ம் ஆண்டில் அதிகபட்சம் சென்னை நகரத்தில் 7586 விபத்துக்களும் திருநெல்வேலியில் 2442 சாலை விபத்துக்களும் நடந்துள்ளன.
அதேபோல் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டை விட 2018ல் 24.39 சதவீதம் குறைந்துள்ளது
2017 ஆம் ஆண்டில் மொத்தம் 16,157 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 2018ல் சாலை விபத்தால் 12,216 பேர் தான் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் எங்களது இலக்கில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். விரைவில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2018ல் 503 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 2017 ல் 644 2017 ஆண்டை விட 27.89 சதவீதம் உயிரழப்பு குறைவு என்று கூறியுள்ளார்.