காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் படி, பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இதனால் இந்தியா\வே கடும் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் உள்ளது.