புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை முன்னர் இன்று 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி! இந்நிலையில் அவர் ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரண் பேடி நேரம் ஒதுக்கியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு எதிராக கடந்த 13ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 6-வது நாளாக முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் கிரண்பேடி அழைத்தும், சில நிபந்தனைகளை முதல்வர் நாராயணசாமி விதித்ததால், பேச்சுவார்த்தைக்கு இயலாமல் போனது. இந்நிலையில் நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டு, மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகயில் இரவு விருந்தில் பங்கேற்கவும் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
Hoping after the evening meeting today, the Cabinet shall return to their offices. And visitors to RajNivas can come. As also petitioners for Open House. And Municipal park across RajNivas returns to morning walkers. pic.twitter.com/xOqduA4e05
— Kiran Bedi (@thekiranbedi) February 18, 2019