கொல்லம் – தாம்பரம் ரயில், வரும் மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகத்தின் செங்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயிலாக வாரம் 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் இனி சென்னை எழும்பூர் வரை நீட்டிப்பு செய்யப் பட்டு, தினசரி ரயிலாக இயக்கப் படவுள்ளது.
கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம், மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர் வரையிலான தினசரி ரயிலாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – கொல்லம் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர் வழியாக, வரும் 5ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக 14 பெட்டிகளுடன் இயங்கவுள்ளது.
உங்களுக்காக.. இதையும் படிக்கலாமே! [su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”73″ order=”desc”]
இந்த ரயிலின் நிறுத்தங்கள் நேரம் குறித்த விவரம்:
ரயில் எண் 16101 தினசரி மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 5.10க்கு செங்கோட்டை வந்தடையும். காலை 8.45க்கு கொல்லம் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ரயில் எண் 16102 கொல்லத்தில் இருந்து தினசரி முற்பகல் 11.45க்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு 3.10க்கு வந்தடைந்து மறுநாள் அதிகாலை 3.30க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்!
இந்த ரயிலின் நேரம், இடம் குறித்த விவரங்கள்: