தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் இன்று முதல் சற்று குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற 14 நகரங்களில் இரண்டு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் தகித்தது.
இந்த நிலையில், அனல் காற்றின் தாக்கம் இன்று முதல் சற்று குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.