குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்கள் தண்ணீர் பிரச்சனையில் இருக்கும்போது குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார்.
“கும்பி கருகுது, குடல் காயுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா?” என்று, ஜெயலலிதா கொடநாட்டில் தங்கி இருந்த போது உண்மை மட்டுமே பேசிக் கொண்டிருந்த கருணாநிதி அப்போது கேள்வி கேட்டார்.
இதே போல், ‘தண்ணீர் பஞ்சம் இல்லை; வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர்’ என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் குடிநீர் வாரியம் 83 கோடி லிட்டர் தண்ணீரை வினியோகம் செய்து வந்தது. நிலத்தடி நீர் இயல்பாக கிடைத்தவரை இது போதுமானதாக இருந்தது.
தற்போது, நிலத்தடி நீரும் கீழே சென்று விட்டது. நீர்நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் குடிநீர் வாரியம் தண்ணீர் வினியோகத்தை 52 கோடி லிட்டராக குறைத்துள்ளது.
சென்னையில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாடால் மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடால் மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்படலாம்; அதற்காக மன்னிக்க வேண்டுகிறோம் என ஓட்டல் நிர்வாகங்கள் விளம்பர பலகை வைத்துள்ளன. சில இடங்களில் சிறு ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
தண்ணீர் பிரச்னை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு பகுதி ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி உள்ளது. அலுவலகம் வருவோர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் கைகழுவ மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். சாப்பாட்டு தட்டு, யுஸ் அன் த்ரோ வகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தட்டுகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.
இவ்வளவு சிரமங்கள் இருந்த போதிலும், தண்ணீர் பிரச்னை என்பது மிகைப் படுத்தப் படுவதாக ஆளும் கட்சியினர் சிலர் கூறுவதும், ரொம்பவே கஷ்டம் உள்ளது என்று எதிர்க்கட்சியினர் சிலர் வெறுமனே அரசியலுக்காகக் கூறுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி விட்டது.
கà¯à®®à¯à®ªà®¿ எரிகிறத௠கà¯à®Ÿà®²à¯ சாகிறத௠கà¯à®·à®¿ சிஙà¯à®•à¯ˆ அவரà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ . கடவà¯à®³à¯ தான௠தணà¯à®Ÿà®¿à®•à¯à®•à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯