நெல்லை மாவட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழும் பெரும்பான்மை மக்கள் அய்யா வைகுண்டரை கடவுளின் அவதாரமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்!மேலும் சமூக நீதி, சமதர்ம ஒழுக்க நெறிகளை போதிக்கும் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் அதீத நம்பிக்கையும் பற்றும் கொண்டு அந்த வழியை பின்பற்றி வருகின்றனர்!
தமிழக அரசு சார்பில் வெளியான பத்து பதினொன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டர் குறித்த வரலாற்றுப் பக்கங்கள் இடம்பெற்றுள்ளது! அதில் அய்யா வைகுண்டரைப் பற்றிய கட்டுரையில், அய்யா அவர்கள் சமூக போராளி போலவும் கிறித்துவ மத விவிலியம் (bible) படித்தார் என்றும், உருவமற்ற கடவுளுக்கு உருவம் கொடுப்பது போன்றும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன!
இந்தக் கருத்துகள் முற்றிலும் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை. இந்தக் கருத்து அய்யா வைகுண்டரை தெய்வமாக வணங்கும் மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும் மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது!
மேலும் சமீப காலமாக வரலாற்று பாட புத்தகங்களில் அன்னிய மத கருத்துக்கள் உயர்ந்தது என்று பிரச்சாரம் செய்யும் விதமாக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!
எனவே தமிழக அரசு மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சிறப்பு கவனம் செலுத்தி வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தவறான கருத்துகளையும் உருவப்படத்தையும் உடனே நீக்க வேண்டும்!
ஐயா வைகுண்டரின் உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றது போல பல்வேறு ஒழுக்க நெறிகளை போதிக்கும் அற்புதமான கருத்துக்கள் அகிலத்திரட்டு அம்மானையில் உள்ளது! இந்தக் கருத்துக்களை பாடநூலில் சேர்க்க வேண்டும்!
இவ்வாறு தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் திருநெல்வேலி மாநகர செயலாளர் ஹரி விஷ்ணு கையெழுத்திட்டு இந்தக் கடிதங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பப்பட்டுள்ளன!
நெல்லை தபால் நிலையத்துக்கு கோஷமிட்டுச் சென்று, இந்தக் கடிதங்கள் அனுப்பப் பட்டன. அப்போது அந்தப் பகுதியில் இருந்த போலீஸார் திடீரென கூடினர். அந்தப் பகுதியே பரபரப்பானது. பின்னர் விவரம் அறிந்த போலீஸார், மாணவர்களை அன்புடன் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வின் போது, ஏபிவிபி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், நகர இணைச் செயலாளர் காலான்கரையான், பள்ளிகள் பொறுப்பாளர் ஹரிச்சந்திரன், கல்லூரிச் செயலாளர் சுடலைமுத்து உடன் இருந்தனர்
ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வைத்த கோரிக்கைகளைப் போல், அய்யா வழி அன்பர்களும் அரசுக்கு வைத்து வருகின்றனர்.
சாமித்தோப்பில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பாலஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,