கான்ஸ்டபிள் பரமேஷ் என்பவர் மருத்துவக் கல்லூரி மாணவியை தகாத முறையில் கிள்ளியதால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. ஹைதராபாத் நகரின் சார்மினார் அருகில் மாணவிகள் தாரணாவில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத் அரசு ஆயுர்வேத மருத்துவமனையை “எர்ரகட்டா”வுக்கு மாற்றியதை எதிர்த்து சார்மினார் அருகே புதன்கிழமை (ஜூலை 31) மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
அந்த சந்தர்ப்பத்தில் மாணவ மாணவியருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கலைத்துவிட்ட போலீஸார், பின்னர் அவர்களில் சிலரை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் அசிங்கமாக நடந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் என்னைத் தொடாதே என்று கத்தினாள். முதலில் சற்று பின் வாங்கிய காஸ்டபுள் மீண்டும் முன்னால் வந்து மாணவியை வேண்டுமென்றே அசிங்கமாக கிள்ளினார். அதனை வீடியோவில் பார்த்தால் புரிகிறது.
போராட்டத்தில் பங்கு கொண்ட ஒரு மாணவியிடம் மஃடியில் இருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அசிங்கமாக நடந்து கொண்டார். மாணவியை காலால் மிதித்து கைவிரல் நகத்தால் கிள்ளி மகிழ்ந்தார்.
அதன் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் அந்த கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.