பண்ருட்டியில் ரூ.3 கோடி செலவில் முதியோர் இல்லம் கட்டி வருகிறார் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அக்காத்தம்மன் கோவில் வளாகத்தில் பண்ருட்டி முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம், சத்யா பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் ரூ 3 கோடி மதிப்பீட்டில்முதியோர் இல்லம் கட்டும் பணி தொடங்கி உள்ளனர்.
இந்த முதியோர் இல்லம் கட்டும் பணி தற்போது சமூக இடைவெளி பயன்படுத்தி வேகமாக நடந்து வருகிறது
இது குறித்து அவர் கூறியதாவது.. பண்ருட்டியில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களை அவர்களது கடைசி காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவு, உடைகளை வழங்கி சிறந்த மருத்துவ வசதிகளுடன் தாய் உள்ளத்தோடு கவனித்து கொள்ள முதியோர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது விரைவில் திறக்கப்படும். இது எங்களது நீண்ட நாள் ஆசை இவ்வாறு அவர் கூறினார்.