அனல் காற்றின் கடுமையில் வருந்தோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த வருடம் மாறாக மின்னல் வெட்டால் உயிரிழந்திருக்கின்றனர் பலர். இத்தகைய சூழலிலும், தங்கள் வாழ்க்கை முறையை நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்.
அடிக்கிற வெய்யிலுல எல்லாம் காஞ்சி கருவாடா போயிடிச்சி… என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்த வெயில்லையும் நாங்க உபயோகமா பயன்படுத்திக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தமிழக கிராமங்களில் மட்டுமல்ல சென்னை போன்ற நகரங்களிலும் கூட வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வருடத்துக்குத் தேவையான வத்தல், வடகம் எல்லாம் போட்டு வெயிலில் காயவைத்து எடுப்பது வழக்கமான ஒன்றுதான்.
இதற்கு ஒரு படி மேலே போய், நாங்க இந்த வெயில்ல எவ்ளோ உபயோகமா பயன்படுத்திக்கிறோம் பாருங்க.. என்று சுட்டெரிக்கும் வெயிலில் சூடான இருசக்கர வாகனத்தின் சீட்டில் தோசை மாவை ஊத்தி, அதில் எண்ணெய் விட்டு, சுளுவாக சுட்டு எடுக்கிறார் ஒருவர்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இதுதான் எங்க ஊரு நிலைமை என்கிறார். சென்னையைச் சேர்ந்தவர் இதான் நம்ம ஊரு நெலம என்கிறார்.
[videopress TDIt4dKw]