― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னைகலைமகள் இதழின் 1100 ஆவது இதழ்: வெளியிட்டார் ஆளுநர்!

கலைமகள் இதழின் 1100 ஆவது இதழ்: வெளியிட்டார் ஆளுநர்!

- Advertisement -

கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழை தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி இன்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலைமகள் இதழின் 1100 ஆவது இதழையும், கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் நூலையும் அவர் வெளியிட்டுப் பேசினார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழும் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் எழுதியுள்ள ” சுதந்திரமும் முத்தமிழும் ” என்கிற நூலும் சனிக்கிழமைஇன்று முற்பகல் 11 மணியளவில் தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆளுநர் ரவி, கடந்த 92 ஆண்டுகளாக தமிழ் மொழி, கலாசாரம், சிந்தனைகள் & பாரதியத்தை செழுமைப்படுத்த ‘கலைமகள்’ தமிழ் மாத இதழ் வழங்கிய பங்களிப்புகளை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். ‘சுதந்திர போராட்டத்திற்கு முத்தமிழ் ஆற்றிய பங்களிப்பு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்… என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version