திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
நூலினை மூத்த சேகரிப்பு கலைஞர் அசோக் காந்தி வெளியிட சங்க தலைவர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை அஞ்சல்தலை சேகரிப்பாளர் காதர் ஹூசைன், யோகேஷ், இளங்கோவன், உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, சாமிநாதன் நன்றி கூறினார்.