அத்தி வரதர் வைபவம்
நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு
வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க
தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! – 01
அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ?
முந்தையர் நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார்
பிந்தையர் மேன்மைகாண சொப்பனம் பேசிநீரும்
எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! – 02
மிகநெடும் காலம்நீருள் கிடந்து,நீர் தவமிருந்தீர்!அகப்படு மீனைப்போல உரியநாள் தரையெழுந்தீர் !!சகித்திடு நாற்றப்பாசி கூழ்ச்சேறு துடைத்தெடுக்க
மகிழ்த்திடு சுகந்தவீச்சு மேனியில் வீசவந்தீர்!! – 03
அத்தி,நீர் யெழும்பாவண்ணம் கல்நாகம் மேனியழுத்தும்
சத்தியத் தேவா!அனந்த சரஸிலே மூழ்குவரதா!
வித்தகர் தாமேயறிவர் நியாயர்நீர் நியாயர்க்கென்று! – 04
தாங்கிய அரவம்தன்னை தாங்கிய அத்திவரதா!ஏங்கிய யானைக்காக இறங்கிய ஆதிமூலா!!வாங்கிய வரங்களாலே நீங்கிய சாபம்கோடி
பாங்குடன் யாமும்வந்தோம் நின்நாமப் பெருமைபாடி!! – 05
மண்டலக் கணக்குநாளில் பூநிலம் அருளவந்தோய்!
முந்தைநாள் சயனக்கோலம் பிந்தைநாள் நின்றகோலம்!!
சொந்தம்போல் மனிதக்கூட்டம் சிந்தையுள் விந்தைபேசி
எந்தையே உன்னைக்காண அலைகளாய் முந்திமோதும். – 06
மின்னிடும் அங்கஅவயம் தூய்மைநில் தைலக்காப்பு!
மன்னுயர் வண்ணப்பட்டு வகைமண மலர்களேற்று
மண்ணவர் ஓங்கிவாழ அருளுமுன் கமலப்பாதம்! – 07
மிலேச்சர்கள் மருளும்வண்ணம் நாத்திகர் வியக்கும்வண்ணம்
களேபரர் கலங்கும்வண்ணம் களிம்புகள் கரையும்வண்ணம்
சிலாதாரு ரூபம்கொண்டு சிறுமதி யாளர்திருந்த
பளீரென அறைந்தணைக்கும் பரிவுடை கனிவுத்திரளே!!- 08
யுகந்தொறும் தவமியற்றி யுழல்துயர் வடியக்கண்டோம்
அகந்தொறும் வாழுமெந்தாய்! எம்மதம் ஹிந்துதர்மம்
உகந்ததாய் உயரியவொன்றாய் உலகினர் ஏற்றிருக்க
புகல்மதம் கேலிசெய்தால் புரியச் செய்! புதையச்செய்!! – 09
எரிந்திடும் வார்த்தைபேசி பழிப்பவர் நாளும்நூறு!உரியதோர் நாழிபார்த்து ஆத்திகத் தலைநிமிர
அரியதோர் செயலைசெய்வீர் அவர்,விஷ வேரறுத்து!! – 10
நீருமோர் அவதாரம்தான்! கலிதனின் மாமருந்தாம்!!
தீருமோர் பிறவிபந்தம்! சிதையுமே வினையும்பகையும்
கூறும்சீர் நாமம்ஆதி அத்திவர தாவென்றிட்டால்
சீறிப்பாய் அம்புபோல செல்லுமே யெல்லாத்தீங்கும். – 11
நினைக்கவும் வரவும்செய்து நேர்காணல் நடத்தி விட்டாய்
பிணைக்கவும் உன்னுளென்னை நின்னருள் நினைத்திருக்கும்
தணிக்கையை முடிக்கவந்தோய், தரிசனம் முடியும்நேரம்!
இன்னுமோர் வாய்ப்புநல்கேன் மறுமுறை அழைத்துயெம்மை!! 12
கவிதை ஆக்கம்: கண்ணன் திருமலை ஐயங்கார்
(அஜினி, நாக்பூர்! மஹாராஷ்டிரா – 440 003)