― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கணவரின் உடலை அடக்கம் செய்ய வராத உறவினர்கள்! வருந்திய மனைவிக்கு உதவிய உள்ளங்கள்!

கணவரின் உடலை அடக்கம் செய்ய வராத உறவினர்கள்! வருந்திய மனைவிக்கு உதவிய உள்ளங்கள்!

- Advertisement -

மதுரையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உடல் நல குறைவால் இறந்த முதியவரின் உடலை தன்னார்வலர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா என்ற ஒற்றை வார்த்தையால் முடங்கி கிடக்கிறது. உறவினர்களின் துன்பங்களுக்கு கூட ஆறுதல் அளிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இயற்கையாக இறப்பவர்களுக்கு கூட உறவினர்கள் கூடி இறுதி சடங்குகள் செய்ய முடிவதில்லை. இந்த கொடுமை தற்போது மதுரையை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு நேர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக மதுரை செல்லூர் பகுதியின் ஒரு சில தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல் நல குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இறந்தவரின் மனைவி வேண்டுகோளின்படி முதியவரின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். அதன்பிறகு ஆம்புலன்ஸின் மூலம் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் உறவினர்கள் யாரும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முன் வரவில்லை.

இதனால் இறந்தவரின் மனைவி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இதனைப்பற்றி கேள்விப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த சில தன்னார்வலர்கள் இறந்தவரின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டிற்கு எடுத்து சென்று புதைத்துள்ளனர். தன்னார்வளர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version