ஹெச்.ராஜா பேசுவது தனிப்பட்ட கருத்தாகத் தெரியவில்லை என்று கூறினார் மு.க.ஸ்டாலின். மேலும், காவிரி குறித்து விவாதிக்க ஏப்.16ல் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாகக் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசைக் கலைப்பது தொடர்பான எச்.ராஜாவின் கருத்து, தனிப்பட்ட நபரின் கருத்தாக இல்லை என்று தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை மறுநாள் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.