வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் டிட்லி புயல், வலுவடைந்து ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
அப்போது அவர், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் டிட்லி புயல், வலுவடைந்து ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் எனக் கூறினார்.