திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் டிச.18 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு, திருச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்க ஆலயத்துக்கு வருவார்கள் என்பதால், டிசம்பர் 18 ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.