வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என துரைமுருகன். காட்டத்துடன் கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அவர் கூறினார்.
முன்னதாக, பணப் பட்டுவாடா புகாரை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு!
வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.10.75 கோடி சிக்கியது! பணப்பட்டுவாடா தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட சிலரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.