சென்னை: திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58.
திமுக.,வின் மீனவர் அணிச் செயலாளராகப் பதவி வகித்தவர். கருணாநிதி முதல்வராக இருந்த போது, மீன்வளத்துறை அமைச்சராக பதவியில் இருந்தார். தற்போது சென்னை திருவொற்றியூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ., ஆனவர்,
அண்மைக் காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை, திருவொற்றியூர் கே.வி.குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் வைத்து காலமானார். அவரது மறைவுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.